×

கஞ்சா விற்ற தகவலை போலீசிடம் சொன்னவருக்கு கத்திக்குத்து: ரவுடி உட்பட 2 பேர் கைது

சென்னை: சென்னை  ஜாபர்கான் பேட்டை ஆர்.வி.நகர் 69வது தெருவை சேர்ந்தவர் அஜய்(எ)அஜித்குமார் (18). இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள்  நிலுவையில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு  ஜாபர்கான்பேட்டையில் உள்ள மாநகராட்சி பூங்கா அருகே அஜய் நின்று கொண்டிருந்தார்.  அப்போது அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் சதாம்(எ)சந்தோஷ் மற்றும்  சஞ்சய்(19) ஆகியோர் வந்தனர். இருவரும் அஜயை கத்தியால்  சரமாரியாக குத்திவிட்டு ஓடினர். அஜயை அப்பகுதி மக்கள் ராயப்பேட்டை அரசு  மருத்துவமனையில் சேர்த்தனர்.  அஜய் அளித்த  புகாரின்படி குமரன் நகர் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தினர். அதில், அஜய் மற்றும் சந்தோஷ் இருவரும் நண்பர்கள்.   இவர்கள், கொலை முயற்சி வழக்கு ஒன்றில் சிறைக்கு சென்று திரும்பினர்.  இந்நிலையில், சிறையில் கஞ்சா வியாபாரிகளின் நட்பு சந்தோஷுக்கு கிடைத்தது.  இதனால், கஞ்சா விற்பனையை சந்தோஷ், ஜாபர்கான் பேட்டை பகுதியில்  செய்து  வந்துள்ளார். இதுபற்றி குமரன் நகர் போலீசாருக்கு அஜய் ரகசியமாக தகவல் கொடுத்துள்ளார். இதை  காவல்நிலையத்தில் இருந்து காவலர் ஒருவர் சந்தோஷிடம் தெரிவித்துள்ளராம்.   இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் தனது கூட்டாளியான சஞ்சயுடன் சேர்ந்து  அஜயை கொலை செய்ய கத்தியால் குத்தியது  தெரியவந்தது.  இதை தொடர்ந்து குமரன் நகர் போலீசார், தலைமறைவாக இருந்து  வந்த சந்தோஷ் மற்றும் அவரது கூட்டாளியான சஞ்சயை கைது செய்தனர். அவர்களிடம்  இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது….

The post கஞ்சா விற்ற தகவலை போலீசிடம் சொன்னவருக்கு கத்திக்குத்து: ரவுடி உட்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Ajay (A) Ajith Kumar ,69th Street, RV Nagar, Jabargaon Pett, Chennai ,Dinakaran ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...